
For those of you who haven't tried Photoshop Express - Try it.
For those who already have - See this. :) - The all new Avyukta Img.
Adobe Photoshop Express
Thursday, May 22, 2008 at Thursday, May 22, 2008 Posted by Keerthi
சொல்லுதல் யார்க்கும் எளிய.. Updated
Tuesday, May 20, 2008 at Tuesday, May 20, 2008 Posted by Keerthi
"சும்மா ஒரு பணக்காரப் பொண்ண காதலிக்க வேண்டியது... அப்புறம் கல்யாணம் செஞ்சு செட்டில் ஆயிட வேண்டியது... " என்று ஒரு டையலாக் காதில் விழுந்ததும் யோசனையில் ஆழ்ந்தேன்.. காதலிப்பது பற்றி இல்லை... அந்த சொற்றொடர் குறித்து.
ஒரு நீண்ட நெடிய ப்ராஸஸ் மிகுந்த செயல்களை ஒன்றாக்கி ஒரே வரியில் சொல்வதால், கேட்பதற்கு அது அச்சீவபிளாக - செயத்தக்கதாகத் தோன்ற ஆரம்பிக்கிறது.
ஆனால், செய்ய ஆரம்பிக்கும் போது, அதன் க்ரானுலர் டீடெயில் (நுணுக்கமான விஷயங்கள்) தரும் பிரச்சனைகளுக்கு நாம் தயாராக இருப்பதில்லை.
உதாரணத்திற்கு, வீட்டில் யாரும் இல்லாத ஒரு மாலைப் பொழுதில் என் சித்திக்கு போன் செய்து "காய்கறி நறுக்காமல், உடம்பு நோகாமல் ஒரு டிபன் செய்து சாப்பிடனும்.. என்ன செய்யலாம் ?" என்று கேட்டதற்கு "பொங்கல் செய்யலாம்" என்றார் சித்தி.
"பலே கீர்த்திவாசா !! செய்து தான் பார்ப்பமே !" என்று முடிவெடுத்து.. "என்னென்ன சாமான் வேணும் ?" என்று கேட்டேன்.
"அரிசி.. மிளகு.. பயத்தம் பருப்பு.." என்று சொல்ல ஆரம்பித்தபோதுதான் சமையலின் க்ராவிட்டி எனக்குப் புரிய ஆரம்பித்தது..
பயத்தம்பருப்பை எப்படி கண்டுபிடிப்பது.. ?
(இன்னும்...)
--- Updated : 22May08---
ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொண்டால், முயற்சியில் காலத்தை ரொம்பக் கழிக்காமல் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்களில் ஒன்று - உதவி கேட்பது. சித்தியை கேட்டே விட்டேன்.
"பயத்தம் பருப்பு தெரியாதாடா ? ம்ம்... ஒன்னு பண்ணு... கொஞ்சம் வெள்ளையா ஓவலா இருக்கும்.. அது உளுத்தம் பருப்பு.. அது இல்லை. அப்புறம் பயத்தம் பருப்பு, இருக்கறதிலேயே குட்டியா இருக்கும்.. " என்பது போலப் பல வர்ணனைகளைக் கொடுக்க ஆரம்பித்தார். உத்தேசமாக இதுதான் பயத்தம் பருப்பு என்ற முடிவுக்கு நான் வர சுமார் பத்து நிமிடங்கள் ஆனது. அதற்குப் பிறகு நான் பொங்கல் செய்ய ஒன்றரை மணி நேரம் ஆனது, தனிக் கதை..
இப்படி, பல செயல்பாடுகள் அடங்கிய ஒரு விஷயத்தை, ரொம்ப சுலுவாக (சுலபமாக) ஒரு வரியில் சொல்வோம். கேட்பதற்கு, அந்த செயல்களைச் செய்வது எவ்வளவு கடினமோ, அதைவிடக் கடினம் குறைவானதாகவே தோன்றும். செயல்படுத்தும்போது அதன் கஷ்டம் உணரப்படும் என்பது வேறு விஷயம்.
ஆனால் Birds Eye Viewவில் பார்ப்பது போல், பெரிய விஷயத்தைச் சுருக்கிச் சொல்வதால், நம்பிக்கை வளர்கிறது.
ஒரு சிலபேர் அனுபவஸ்தர்கள். "கார்த்தாலே ஒரு ஆறரை மணி வாக்கிலே மாயவரம் போய் சேரும். இறங்கி ப்ளாட்பாரம் வழியா மெயின் என்ட்ரன்ஸ் வெளியே வந்தீன்னா, நிறைய டாக்ஸி இருக்கும். இண்டிகா எல்லாம் புடிக்காதே. அம்பாஸடர்காரன் எவனையாவது கூப்பிடு. கஞ்சனூர் போகனும்னு சொல்லு.. பேர் மினிமம் இருனூறூ ரூபாய் கேட்பான்...." என்று ஒரு டீடெயில்ட் ஸ்பீச் கொடுப்பர். இதை சுருங்கச் சொல்வதென்றால், "கார்த்தால ரயில் இறங்கி டேக்ஸி புடிச்சு கஞ்சனூர் போயிடு.." எனச் சொல்லலாம்.
இதில் எது சிறந்தது ?? அது கேட்பவரைப் பொறுத்தது.
பொதுவாக, அக்கறை எடுத்துக்கொண்டு பேசினால் விலாவரியாக இருக்கும். சுருக்கமாகச் சொல்வது என்பது பெரும்பாலும் கழித்துக் கட்டுவது போல இருக்கும். சில சமயங்களில் குழப்பம் வராமல் இருக்க, சுருங்க்கச் சொல்வதுண்டு. ஆனால், மோஸ்ட்லி.. கழட்டி விடுவதற்கு.
இப்பொழுதெல்லாம், "DETAIL" என்பதற்கு வேல்யு இல்லை.. அல்லது குறைந்த மதிப்பே உள்ளது. "அஞ்சாதே" படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது, அதன் விளக்கமான கதை. (பலபேருக்கு அதுதான் பிடிக்கவில்லை). யாரும் "அவருக்கு என்ன ஆச்சு.. இது எப்படி திடீரென வந்தது.." என்று கேள்விகேட்க முடியாது. அத்தோடில்லாமல், அந்த டீடெயில் கதைக்கும் கதாமாந்தர்களுக்கும் வலு சேர்க்கிறது. இப்பொழுதெல்லாம் ஆங்கிலத்திலும் இப்படித்தான் படம் எடுக்கிறார்கள். "Assassination of Jesse James by the coward Robert Ford" பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தால் அவசியம் பார்க்கவும்.
அது சரி, நீங்கள் எப்படி ?
மங்களூருக்கு ஒரு ரயில் பயணம்.
Friday, May 16, 2008 at Friday, May 16, 2008 Posted by Keerthi
Created with Admarket's flickrSLiDR.
ஹாபி - 3
Tuesday, May 13, 2008 at Tuesday, May 13, 2008 Posted by Keerthi
"to follow a favourite pastime" என்று ஒருவர் சென்ற பதிவில் விகிபீடியா டெஃபனிஷன் கொடுத்தார். அதெல்லாம் சர்தான் வாத்யாரே ! நீங்கள் உங்கள் பொழுதை சுவைபட செலவழிக்கிறீர்கள் என்றால் மிக்க மகிழ்ச்சியே !
பொருள்படி் செய்தல் - பொருள்கொள்ளும் வண்ணம் செய்தல். இரண்டும் வெவ்வேறு விஷயங்கள்.
வேலை வெட்டி இல்லாத பொழுது என்பது வெள்ளைக் காகிதம் போன்றது. அதில் ஓவியம் வரையலாம். கதை எழுதலாம். காகிதப் பொம்மை செய்யலாம். வெறித்துப் பார்க்கலாம். கிழித்துப் போடலாம். எண்ணை தடவி ட்யூப் லைட் அடியில் கட்டி விட்டு பூச்சிகளை சாகடிக்கலாம். என்னென்னெமோ செய்யலாம் ! இல்லையா ?
உங்களை ஒரு அரேபிய ஷேக்காக கற்பனை செய்து பாருங்கள். ஒய்யாரமாகப் படுத்துக்கொண்டே, வலது கையை ரங்கநாதரைப்போல் தலைக்கு வைத்துக்கொண்டு இடது கையால் உட்க்காவை குடித்துக் கொண்டிருப்பது போல் நினைத்துப் பாருங்கள். இரண்டு நாள் பூராவும் இதையே செய்து கொண்டிருந்தால் எப்படி இருக்கும் ?
இரண்டு நாட்கள் தொடர்ந்து, "விட்டேனா பார்" என்று டி.வி. பார்ப்பதும், இதுவும் ஒன்று தான். (சண்டை போட நான் ரெடி !!! கமான் !! கூகிள் டாக் மீ ! ). எக்ஸ்டசி ஊசி குத்திக்கொண்டு "பரப்ரம்மம்" போல சோபாவில் உட்கார்ந்து கொண்டோ, அல்லது அகஸ்மாத்தாக ஒரு யோகாசனத்திலோ (ஹலாசனா !) அமர்ந்து ஜோடி நம்பர் ஒன் பார்ப்பதை ஒரு ஹாபி என்று சொன்னால் - ம்ஹும் !! நீங்கள் அசமஞ்சம் கேட்டகரியில் சீக்கிரம் விழப்போகிறீர்கள்.
அப்படிச் செய்வது தவறு என்று நான் கருதவில்லை. ஆனால், உங்கள் பொழுது மற்றவர் கையில் செல்வதை உணர்கிறீர்களா ? உங்கள் ஹாபி டி.வி. பார்ப்பது என்றால், நிகழ்ச்சிகள் நன்றாக இருந்தால் தான் உங்கள் பொழுது கழியும். இல்லையென்றால் ரிமோட் பட்டனின் எழுத்துக்கள் தான் அழியும் (த்சோ ! த்சோ! த்சோ!). சீக்கிரம் போரடிக்கும். சுவையான நிகழ்ச்சி ஒன்றூம் இல்லையென்றாலும் டி.வி. மென்னியைத் திருக நீங்கள் தயக்கப் படுகிறீர்கள் என்றால் "டி.வி இஸ் நோ லாங்கர் யுவர் ஹாபி ! இட் இஸ் எ செடேஷன்". என்டெர்டெயின்மென்டையும் ஹாபியையும் கலந்து கட்டி அடிக்காதீர்கள். கொஞ்ச நேரம் கிடைத்தால் எங்கே என்டர்டெயின்மென்ட் என்று அலைபாய விடாமல், சற்று அவுட் ஆப் தி பாக்ஸ் யோசித்து செலவு செய்யுங்கள்.
நிற்க.
நான் டி.வி பார்ப்பதை நான் விட்டொழித்து நான்கு வருடங்கள் ஆகப் போகிறது. அதனால் யோக்கியம் என்று இல்லை. டி.வீ க்கு பதிலாக கம்ப்யூட்டர். பெரிய வித்தியாசம் இல்லை. சீரியலுக்கு பதில் வெப்சைட்டுகள்... ரிமோட்டுக்கு பதில் கீபோர்ட்.. அதே உட்கா தான்.
ஆனால், இப்பொழுதெல்லாம் கொஞ்சம் கான்ஷியஸாக ஸ்பெண்ட் செய்கிறேன். என்ன செய்கிறேன் என்பதெல்லாம்தான் உங்களுக்குத் தெரியுமே ! ஒரு சில எக்ஸ்பெரிமெண்டுகளை இன்னும் பிரகடணப் படுத்தாமல் வைத்திருக்கிறேன். காரணம், அவை பெரிதாக சோபிக்கவில்லை. இருந்தாலும் என் லீஷர் டைமை கொஞ்சம் டைனமிக்காக செலவழித்த திருப்தி எஞ்சியிருக்கிறது.
எனக்குத் தெரிந்த ஒருவர் வீட்டைச் சுற்றி கார்டன் வைத்திருக்கிறார். அவர் பாஷையில் சொல்லப்போனால், கார்டனுக்கு நடுவில் வீடு வைத்திருக்கிறார். வேலை முடித்துவிட்டு வந்தவுடன், வீட்டுக் கடமைகளையும் காப்பியையும் ஒருசேர ஆற்றிவிட்டு தோட்டத்துக்குச் சென்றுவிடுவார். அங்கே ஒவ்வொரு மரம், செடி, கிளை, இலை இவற்றுடன் கிட்டத்தட்ட உரையாடுவார். புதுச் செடிகளை வருடிக் கொடுப்பார். கொடிகளை நீவி விடுவார். குப்பை நீக்கி சுத்தம் செய்வார். எனக்கு அதைப் பார்க்க "கடவுளும் இதைத்தான் செய்கிறார்" என்று தோன்றும். சின்னதாக அவர் வளர்த்த அவரது உலகம்.. அதில் அவர்தான் கடவுள்.
அவர் பொறுமையும், இன்ட்ரெஸ்டும் பொறாமைக்குறியவை. அவ்வளவே ! பின்பற்ற த்ராணியுமில்லை. அடுக்குமாடி குடியிருப்பில் அதற்கு குடுப்பினையும் இல்லை. ஆனால், எனக்கென்று சில ஹாபிக்களை கண்டுபிடித்து பொழுதைக் கழித்து வருகிறேன்.
"என் சொந்த டைம். நான் எப்படி வேண்டுமானால் செலவழித்துவிட்டுப் போகிறேன்." என்பீர்களேயானால், "Of course ! You should !" என்பது என் பதில். "காலம் பொன் போன்றது !" என்பதெல்லாம் என் கட்சியில்லை. செலவு செய்வது என்பது கலை. பணமாக இருந்தாலும் சரி. காலமாக இருந்தாலும் சரி. ஆங்கிலத்தில் அழகாகச் சொல்லுவார்கள் - "Cultivate a good hobby".
எப்படிச் செலவழிக்கலாம் என்று கேட்கிறீர்களா ? போய் ஜன்னலுக்கு அருகில் உட்கார்ந்து யோசியுங்கள். தட் வுட் பீ எ குட் ஸ்டார்ட்.
ஹாபி - 2
Thursday, May 08, 2008 at Thursday, May 08, 2008 Posted by Keerthi
உலகத்தில் இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று உபயோகமானது.. இன்னொன்று உபயோகமற்றது. இதில் உபயோகமானது என்பது மட்டும் உபயோகமில்லாதது என்று மேதாவிகள் அறிவர்.
ஹிஹி ! இப்படி ஏதாவது ஓப்பனிங் கொடுக்க வேண்டும் என்பது, என் நீண்ட நாள் அவா ! நீங்கள் தலையை சொறிய வேண்டாம். ஹாபி மேட்டருக்கு வருவோம். உங்கள் ஹாபி என்ன என்று கேட்டதற்கு, கொஞ்சம் வித்தியாசமாகவே எல்லாரும் எழுதியிருந்தீர்கள். "இப்போதைய ஹாபி, டையப்பர் மாற்றுவது !" என்று அனுபவஸ்தர்கள் கூறியதிலிருந்து பெரும்பாலும் ஹானெஸ்டாக எழுதியிருப்பீர்கள் என்பது தெரிகிறது.
"இதென்ன ஹாபிக்கும் ஹானெஸ்டிக்கும் சம்பந்தம் ?" என்று கேட்பவர்களுக்கு, ஒரு சிறு விளக்கம். கேள்வி கேட்டவுடன் பதில் சொல்ல வேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டு பதில் சொல்லும் சிலர், உண்மையை பேசுவதில்லை. அவர்கள் குறிக்கோள் உண்மை பேசுவது இல்லை. அவர்கள் குறி எல்லாம் பதில் சொல்வதில் தான்.
உதாரண கேள்வியாக, "உங்க ஹாபிஸ் என்னென்ன ?" என்பதை எடுத்துக் கொண்டால், நம் உதாரண ஆசாமி கொஞ்சம் யோசிப்பார். "அடெடே ! இதென்ன கேள்வி ? ம்ம்ம்ம்... என்னவென்று சொல்வது.. பொழுதுபோக்காக நாம் செய்யும் விஷயங்கள் என்ன ?? .... பொழுதுபோக்கா ?? ம்ம்ம்... " என்று ஒரு செல்ப்-ரியலைசேஷன் மோடுக்கு சென்று விடுவார். மீண்டு வந்து அவர் சொல்லும் பதில், முக்காலே கால் வாசி "வாட்சிங் டி.வி" ஆக இருக்கும்.
நான் பார்க்கும் வட்டத்திற்குள், மக்கள் "ஹாபி" எக்குத்தப்பாக டிஃபைன் செய்திருக்கிறார்கள். என் நண்பனிடம் நேற்று கேட்டதற்கு, "போடா ! ஹாபின்னு எல்லாம் ஒன்னும் கிடையாது. டெய்லி பால் வாங்கிட்டு வருவேன். அதை வேணும்னா சொல்லலாம்." என்றான்.
ஒன்று - மக்களுக்கு தங்கள் ஹாபி என்ன என்பதை விளக்கத் தெரியவில்லை. அல்லது பொழுதை கழிக்கத் தெரியவில்லை. உதாரணமாக திடீரென முதலாளி / பாஸ் லீவ் கொடுத்து ஒரு மாதம் என்ஜாய் செய்ய பெர்மிஷன் கிடைத்தாலும் எவ்வளுவு பேர் அதை சுகமான விடுமுறையாக அதை ட்ரான்ஸ்பார்ம் செய்வார்கள் ???
கையில் ஒரு சேட்டர்டே சண்டே யை வைத்துக்கொண்டு, அவற்றுள் மணித்துளிகளை நிறப்ப கஷ்டப் படுபவர்களைப் பார்த்திருக்கிறேன். நானும் அதில் ஒருவனாக இருந்திருக்கிறேன். '
ஒரு காலத்தில் "ஸ்டாம்ப் கலெக்டிங்" என்பது பள்ளிகளில் - "ஹாபி" என்ற வார்த்தை தெரிய ஆரம்பிக்கும்போது, தெரிய ஆரம்பித்த ஹாபி. சில பேர் இன்னும் அதில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அதன் லாஜிக் எனக்கு அன்றும் இன்றும் புரியவில்லை. மாமா வாங்கிக்கொடுத்த ஸ்டாம்ப் புக்கும், ஆயிரம் ஸ்டாம்புகளும் எனக்கு முதல் ஹாபியாக "ஸ்டாம்ப் கலெக்டிங்" நிறுவப்பட்டது. அப்புறம் ஸ்டாம்ப் கிடைக்காமல், இன்லேண்ட் கவரில், போஸ்ட் காட்டில் ப்ரிண்ட் ஆகியிருந்த ஸ்டாம்புகளை எல்லாம் சேகரிக்க ஆரம்பித்தேன். அப்புறம் வளர்ந்து விட்டேன்.
---- டு.பி.கன்டின்யூட்.
(அவசரமாக நான்கு நாள் லீவ் போட்டு வெளியூர் செல்கிறேன். வந்து தொடர்வோம்).
ஹாபி !
Tuesday, May 06, 2008 at Tuesday, May 06, 2008 Posted by Keerthi
உங்க ஹாபீஸ் என்னென்ன ?
"வெல்.. வாட்சிங் டி.வி., லிசனிங் டு ம்யூசிக், சாட்டிங்... தட்ஸ் இட்".
எத்தனை பேர் இதை சொல்லிக் கேட்டிருக்கிறீர்கள். சன் ம்யூஸிக் சேனலில் இதைக் கேட்டுக் கேட்டு காதில் புளித்த தயிறின் வாசனை வருவதாக என் நண்பர் ஒருவர் சொன்னார்.
அடுத்த பதிவு எழுதும் முன்... உங்கள் ஹாபி என்ன என்று எழுதுங்கள் பார்க்கலாம் ?
பீ ஹானெஸ்ட் !!
I hate MONDAYS
Sunday, May 04, 2008 at Sunday, May 04, 2008 Posted by Keerthi
எரிச்சாலான எரிச்சல். சே ! மதாந்தமாக ஜோதிகா போல் மரகதச் சோம்பல் முறித்து எழுந்திருக்கும்போது, அலுவலுக்குச் செல்லவேண்டுமே என்ற அந்தக் கொடூரமான நினைவு வந்து அதிகாலையின் அழகை ரசிக்கவிடாமல் செய்கிறது.
திங்கள்கிழமைகளை ஆரம்பிப்பது என்பது எனக்கு வேண்டா வெறுப்பான விஷயம். ஸ்டார்ட்டிங் ட்ரபிள் தான். உதைத்து ஓட்டினால் கிடு கிடு என வண்டி வெள்ளிக்கிழமை வரை ப்ரச்சனை இல்லாமல் வந்து நிற்கும். இருந்தாலும் இந்த திங்கட்கிழமையின் முதல் சில நாழிகைகளை விழுங்கியாக வேண்டியிருக்கிறதே !
என்னதான் தவசச்சாப்பாடு ருசியாக இருந்தாலும், பாகற்காய் சாம்பார் சாப்பிட்டே ஆகவேண்டும்.
நானும் பல தடவை இந்த மண்டே மார்னிங் ப்ளூஸை ஒழிக்க பல வகைகளை கையாண்டு பார்த்திருக்கிறேன். ஊஹும் !! மாட்டேன் என்று கசந்து தொலைக்கிறது. ! "வேலைக்குச் சென்றால் ஆனந்தமாக, ஓசி ஏசியில் ஈசி சேரில் உட்கார்ந்து கோஸியாக இருக்கலாம்" என்றெல்லாம் சொல்லி மனதை சமாதானப் படுத்தினாலும் "ஐயோ கடவுளே ! சொர்கமே என்றாலும் அது நம்ம வீட்டப் போல வருமா !! தந்தன தந்தன தந்தா !!" என்று இளையராஜா குரலில் மனம் அடம் பிடிக்கிறது.
சில சமயம் உண்மையை, அதன் தீவிரத்தை உணர்ந்த போதும் மனம் அடம்பிடிக்கும். இன்ஸ்டின்க்ட் வின்ஸ் ரீஸன்.
"ஆபீஸ் போனால் வீட்டு வேலை செய்ய வேண்டாம். நாம் நாலு பேரை வேலை வாங்கலா.." என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே, மனம் உடலை அசைத்து கைகளை ஏசுபிரான் சிலுவையில் அறைந்த பாவனையில் தூக்கி சோம்பல் முறித்துக் காண்பிக்கும். ஆஹா ! சோம்பல் முறிப்பது எத்தனை ஆனந்தம். தும்மல் வந்ததும், தும்மி முடித்தவுடன் அப்படியே கண்களை மூடி அனுபவிப்பவர்களைப் பார்த்திருக்கிறீர்களா ! அப்படி ஓர் சுகம். !!
சே ! சே ! இந்த மனம் என்னை வென்றுவிடும் போல் இருக்கிறதே !! இதைப் போக்க ஒரே வழி.. "டெலி போர்டிங்".. ஞாயிறு இரவு தூங்கச் சென்றால், திங்கள் காலை விழிக்கும் போது ஆபீஸில் இருக்க வேண்டும்.
பள்ளி நாட்களில் திங்கள் கிழமை இதைவிட பாரமாக இருந்திருக்க வேண்டும். துக்கம் தொண்டையை அடைக்க, அழுகை கண்களில் தெரிய பள்ளிக்குச் செல்வேன். இப்பொழுது மெச்சூரிட்டி காரணமாக அழவும் முடியாது (!). ஆனால் இன்றும் துக்கம் தொண்டையை அடைக்கிறது. ஏதாவது காரணத்தினால் இன்றைக்கு லீவ் விட மாட்டார்களா ? ஏதாவது பெரிய பதவியில் இருக்கும் பெரிசுகள் மண்டையைப் போடாதா ? எல்லாமே சரியாய் இருந்து தொலைக்கும். ! சே !!
நீங்கள் எல்லாம் எப்படிச் சமாளிக்கிறீர்கள் ?
2008 - Time 100
Thursday, May 01, 2008 at Thursday, May 01, 2008 Posted by Keerthi

2008 TIME 100 - Most influential People of the world.
Inspiring stories. Give this a read (Click on Next, for the next person).
It doesn't matter if they are good or bad.. it just matters, they INFLUENCE this world.
May be, I can be there listed on the Top-10,000,000 for Bad-Influences. But I hear, there's a tough competition for that category as well. So, I have my own ways of getting on the covers of TIME Magazine. :)
தொழில் நுட்பம்
Wednesday, April 30, 2008 at Wednesday, April 30, 2008 Posted by Keerthi
நுட்பம் - தொழில்நுட்பம்
என்ன வித்தியாசம் ? தமிழறிஞர்கள் விளக்குக.
1994ல் என் மாமா அமெரிக்காவிலிருந்து வந்தபோது, அவரிடமிருந்த ஒரு பொருளை லவட்டிக்கொண்டு பள்ளியில் ஸீன் காமித்தது இன்று நினைத்தாலும் காமெடியாக இருக்கிறது. அது என்ன பொருள் தெரியுமா ? சி.டி.
பள்ளியில் மற்ற நண்பர்களிடம் காண்பித்து, "இதுக்குள்ள ஆயிரம் பேஜுக்கு லெட்டர் அடிக்கலாம்.. தெரியுமா ?".. என்பேன். ஆயிரம் காலி பேப்பர்களை இதற்குள் எப்படி சொறுகினார்கள் என்பது மனதிற்குள் உதித்த ஒரு குழப்பம். இருந்தாலும், புகழ் வரும் வேளைகளில் கேள்வி கேட்பது யூஸ்லெஸ்.
பிற்காலத்தில் இது இவ்வளவு தண்ணிப்பட்டப் பாடாக சி.டி. கிடைக்கப் போகிறது என்ற ஊகம் அப்போது இருக்கவில்லை.
1998ல் கையில் ஒரு லேப் டாப் கிடைத்தது. அதில் சி.டி. டிரைவ் இருக்கும். ஆனால் போட்டுப் பார்க்க என்று "விண்டோஸ் 98" சி.டி. மட்டும்தான் இருந்தது. அந்தக் காலத்தில்தான் வீட்டில் கம்ப்யூட்டர் என்ற சௌகர்யம் கொஞ்சம் கொஞ்சமாக தலை தூக்கத்துவங்கியது. நண்பர்கள் வீட்டில், பழைய இரும்பு மேஜையில் வெள்ளை கலர் கம்ப்யூட்டர் மினுக் மினுக் என்று மின்னிக்கொண்டிருக்கும். அவர்களுடைய டேபிள் டிராயரைத் திறந்தால் சில பல சி.டிக்கள் எட்டிப் பார்க்கும். அடச்சே ! நம் வீட்டில் இல்லையே என்று "சிப்" மேகஸினை மாதா மாதம் வாங்க ஆரம்பித்தேன். நூறு ரூபாய்க்கு சில பரீட்சார்த்த மென்பொருள்கள் (trial software.. ஆஹா !), ஒரு சில டெமோ கேம்கள், ஷாருக்கான் ஐஷ்வர்யா ராய் படங்கள் என்று பெரும்பாலும் எனக்கு உபயோகமில்லாத விஷயங்கள் ஏறாளம்.
ஆனால், எனக்குள் "எல்லாரும் இந்த சி.டி.யை வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். நமக்குப் பயன்படுத்தத் தெரியவில்லை.. ஒருவேளை நமது கம்ப்யூட்டர் அறிவு அவ்வளவுதானோ !!" என்று தோன்றும்.
டர்போ சி ப்ளஸ் ப்ளஸ் (Turbo C++) என்ற ஒரு மென்பொருள் கையில் சி.டியாக கிடைத்தது, என்னை என் ஏரியாவில் ராஜா ஆக்கியது. பில் கேட்ஸின் தம்பி மாதிரி இங்கும் அங்கும் ஓடி அத்தனை வீட்டிலும் இன்ஸ்டால் செய்து கொடுத்தேன். அந்த சி.டி யை கர்சீப் போட்டு சுற்றி சர்வ பத்திரமாக எடுத்துச் செல்வேன். அப்பொழுதைய காலம் வரைக்கும் சி.டி என்றால் மென்பொருள் வைத்திருக்கும் வஸ்து என்பது என் எண்ணம்.
1999ல் அதே அமெரிக்க மாமாவின் பையன் ஏர்போர்ட்டில் டிஸ்க்மேனுடன் இறங்கி ஒரு கல்சர் ஷாக் கொடுத்தான். அப்பொழுது தான் ஆடியோ சி.டி பிளேயர்களை நான் பார்க்க ஆரம்பித்திருந்தேன். நண்பர்கள் வீட்டில் த்ரீ சி.டி. சேஞ்சர்கள் வர ஆரம்பித்தன.
கொஞ்ச காலம் கழித்து சம அளவில் பாடல்களும், மென்பொருளும் கலந்து சி.டிக்கள் சேகரித்திருந்தேன். மொத்த எண்ணிக்கை எட்டு. நியூஸ் பேப்பரில், பிரிட்டனில் ஒரு புல்டோசர் குப்பையாகிவிட்ட சி.டிக்களின் மேல் ஏறி குப்பையை அழித்ததை வாயைப் பிளந்து பார்த்துக்கொண்டிருந்தோம்.
மெது மெதுவாக, சி.டி. ரைட்டர் வர ஆரம்பித்தது. இதுவும் நண்பர்கள் வீட்டில்தான். அரிதாக எம்.பி.த்ரீ (MP3) யும் வர ஆரம்பித்தது. முதன் முதலில் "சங்கமம்" படத்தின் பாடலை ஸ்ப்ளிட் செய்து இரண்டு ப்ளாப்பிகளில் ஆறு தடவை நண்பன் வீட்டுக்குச் சென்று எடுத்து வந்தேன்.
நிற்க.
எட்டு வருடம் ஓட்டினால், 2008.
இப்பொழுது சி.டி யை டி.வி.டி ஓவர் டேக் செய்து, துணைக்கு ப்ளாஷ் டிரைவ்கள், எம்.பி.3 பிளேயர்கள், ப்ளூ ரே என்றெல்லாம் டெக்னாலஜி புற்றீசலாய் விரவி நிற்க, சி.டி என்கிற காம்பேக்ட் டிஸ்க், வாழ்ந்து கெட்ட பரம்பரையாய் நிற்கிறது.
திருட்டு வி.சி.டிக்கள் கூட புழக்கத்தில் குறைய ஆரம்பித்துள்ளது. டி.வி.டி தான் இருபது ரூபாய்க்குக் கிடைக்கிறதே ! இப்பொழுதும் எண்ணிப் பார்த்தால், டிராயரில் எட்டு சி.டிக்கும் குறைவாகத்தான் இருக்கும். மூன்று தலைமுறைகளுக்குப் பிறகு சி.டி என்பது மறக்கப் படலாம்.
ஆனால், எங்கள் தலைமுறைக்கு, அதாவது கம்ப்யூட்டரை இயக்கத் தெரிந்த முதல் சில தலைமுறைகளுக்கு தேய்ந்து தேய்ந்து சேவை செய்த சி.டி, தொழில்னுட்பத்துக்கெல்லாம் பேருதவி செய்த ஒரு தொழில்னுட்பம்.
அது ஏன் திடீரென சி.டி. பற்றி ஒரு போஸ்ட் என்று கேட்கிறீர்களா !
"வாடி வாடி வாடி ! கை படாத சி.டி" என்ற பாடல் மதியம் FMல் ஒலிபரப்பானது.
அந்தப் பண்பலையில், நினைவலைகள் எண்ணக் கரையில் கொஞ்சம் ஒதுங்கிவிட்டுச் சென்றன.
மா !
Sunday, April 27, 2008 at Sunday, April 27, 2008 Posted by Keerthi

[போட்டோ - வேளச்சேரி பாலசுப்ரமணியன்]
மாம்பழ சீஸன் ஆரம்பித்து இரு வாரமாகிவிட்டது. ஆபீஸில் "க்ரீம்ஸ் ரோட்டின் பழக்கடை" (ஹெ ஹெ ! Fruit shop on Greams Road) போட்டுத்தரும் கெட்டியான மேங்கோ மில்க் ஷேக்தான் என்னுடைய லேட்டஸ்ட் அடிக்ஷன். பங்கனம்பள்ளி மாம்பழம் பழுத்துவரும் நாளுக்காக, காத்திருக்கிறேன்.
நான் ஸ்ரீரங்கத்தில் ஆறுமாதம் தங்கி வேலை செய்த நாட்கள், நல்ல வேளையாக மாம்பழ ஸீஸனை உள்ளடக்கியது.
அதிகாலை நான்கரை மணிக்கு விழித்து ராஜகோபுரத்தை தரிசித்துக்கொண்டே, முரளி கடையில் காப்பி குடிப்பது பழக்கம். முரளி காப்பி கடை வெகு பிரசித்தம். காபி டிகாஷன் போடும் பெர்குலேட்டர்கள் எட்டு சைஸில் இருக்கும்.
பிஜேபி பெரிய மனிதர்கள் அரை டிராயருடன் பேப்பர் வாசித்துக்கொண்டு அரட்டை அடித்துக்கொண்டே காபி சாப்பிடுவார்கள். பெரும்பாலும் நாற்பது வருடத்துக்கு மேல் காபியை இரசிப்பவர்கள்தான் இக்கடைக்கு வருவார்கள். பில்டர் காபியின் தெய்வாம்ஸங்களை இருபது வயதிலேயே உணர்ந்து ஞானியாகிய(!) நானும் அவர்கள் லீகில் சேர்ந்து கொண்டேன்.
காபி அருந்திவிட்டு, வீட்டுக்குச் சென்று நியூஸ் கேட்டுக்கொண்டே குளித்து விட்டு, ஆபிஸ் கிளம்பிவிடுவேன். வழியில் சாத்தார வீதியில் பூ வாங்கி இரண்டாகப் பிரித்துக்கொள்வேன். ஒன்று ராகவேந்திர மடத்திற்கு; மற்றொன்று ஆபிஸில் பாண்டிச்சேரி மதரை வழிபடும் மோகன்தாஸ் என்றவருக்கு.
சாத்தார வீதி தெரியாதவர்களுக்கு - இங்கு உலகத்தில் உள்ள அத்தனை மலர்களும் கிடைக்கும். கொட்டிக் கொட்டிக் கிடக்கும். விலை மலிவாகக் கிடைக்கும். எல்லாவற்றையும் விட முக்கியமாக, இந்தத் தெருவில் நடந்து சென்றால் "வளமை" என்ற சொல்லுக்கு பொருள் தெரியும். பத்து ரூபாய்க்கு சரவணா ஸ்டோர்ஸ் பை அளவுக்கு ரோஜாப்பூ வாங்கலாம்.
எல்லாம் வாங்கிவிட்டு, ராகவேந்திர மடத்துக்குச் சென்றால் - அமைதி காத்திருக்கும். கொஞ்சம் சுற்று சுற்றிவிட்டு நேரே வெளியே வந்து கண்டோன்மென்ட் பஸ் ஏறிவிடுவேன்.
அம்மாமண்டபம் வந்தவுடன், நாசித்துவாரங்களை சுத்தம் செய்ய ஆரம்பிபேன். ஓரிரண்டு முறை ஆழமாக சுவாசித்துப் பார்த்து தயாராக ஜன்னலுக்கு அருகில் முகம் வைத்துக்கொள்வேன்.
மாம்பழச்சாலை வரும்.
தாத்தாச்சாரியார் மாம்பழக்கடை என்று ஆரம்பித்து ஒரு சில பல கடைகள் மாம்பழக் கனியை விற்க ஆரம்பித்திருப்பார்கள். அந்த வாசனை இருக்கிறதே !! ஆஹா ! வாழ்க்கையில் சின்னச்சின்ன சந்தோஷங்களை அனுபவிக்க ஒரு குடுப்பினை வேண்டும்.
மாவடுவில் ஆரம்பித்து, புளிப்பு மாங்கா, கிளி மூக்கு மாங்கா, பழுத்தும் பழுக்காத அசட்டுப் புளிப்பு மாங்கா என்று மாங்காவின் ரேம்ப் வாக் முடிந்தவுடன், கம்பீரமாக பங்கனம் பள்ளி வருவார். கத்தியால் வெட்டினால் வழுக்கிக்கொண்டு ஒரு கதுப்பு பொளுக் என்று விழும். அவ்வளவு கெட்டியாகவும், திகட்டாத மணத்துடன் "The perfect sweetness"ஸுடன் இருக்கும். ஆரம்பத்தில் வரும் பங்கனம்பள்ளியின் விலை அதிகம். அப்புறம் காம்பெடிஷனுக்கு ருமானி வந்த பிறகு, பங்கனம்பள்ளி விலை குறையும். ருமானி கொஞ்சம் மிடில் வெரைட்டி. இட் இஸ் எ சர்ப்ரைஸ் பேக்கேஜ். திடீரென்று சில பழங்கள் அபாரமாக இனிக்கும். சில பழங்கள் அழுகிப் புளித்து முகம் சுளிக்க வைக்கும்.
இளம்பிராயத்தில் குறிப்பாக பங்கனம்பள்ளி சீஸனில், வீட்டுக்கு விருந்தாளி வந்தால் சாப்பிடும்போது மாம்பழம் நறுக்கி இலையிலிடுவர். நண்டு சிண்டுகளுக்கு கொட்டையில் ஒட்டியிருப்பதைப் போட்டுவிடுவர். எப்பேற்பட்ட அநியாயம் ! இருந்தாலும் விடாமல் கொட்டையின் நரம்புகள் தெரியும்வரை அதை வறட்சியடைய விட்டுவிட்டுத்தான் தூக்கிப்போடுவோம். ஒரு தடவை கொட்டையை மண்ணில் புதைத்து தண்ணீர் எல்லாம் விட்டு வளர்க்கத் திட்டமிட்டோம். மூன்று நாட்களில் மறுபடியும் தோண்டிவிட்டு ஸ்டேடஸ் கால் நடத்தியதில் டிஸ்ஸப்பாயிண்ட் ஆகி அப்படியே டிராப் செய்துவிட்டோம்.
பங்கனம்பள்ளி, செந்தூரா, அல்ஃபோன்ஸா எல்லாம் சென்றபின் மாங்கா மாம்பழம் சில இடங்களில் கிடைக்கும். கடைசியாக செந்தூரா. நார் நாராக இருக்கும் இந்தப் பழம் துக்க சம்பாவனை. "மாம்பழ சீஸன் முடியப் போகிறது... என்னை நீங்கள் கடைசியாகக் காணப்போகும் வடிவம் இதுவே.. அடுத்த வருடம் சந்திப்போம்" என்று விசும்பலுடன் விடைபெறும் மாம்பழம் செந்தூரா. செந்தூராவில் கொட்டைக்கும் தோலுக்கும் நடுவே பேருக்குத்தான் பழம் இருக்கும். இருந்தாலும் ஒரு ஆறுதல்.
வாரா வாரம் திருச்சியிலிருந்து சென்னை வரும்போதும் மாம்பழம் வாங்கிச் செல்வதுண்டு. மாம்பழம்.. மாம்பழ ஜூஸ், மில்க் ஷேக், மாங்கா தொக்கு (ஸ்ஸ்ஸ்ஸ் !), மாங்கா சாம்பார், மாங்கா பச்சிடி, மாவடு, மாங்கா ஊருகாய் (தொக்கு வேறு.. ஊறுகாய் வேறு), வெந்தைய மாங்காய் என்று வெளுத்து வாங்கிவிட வேண்டும்.
மாம்பழம் சர்வம் ஜகத் !
தசாவதாரம் ஒலித்தகடு வெளியீடு
Friday, April 25, 2008 at Friday, April 25, 2008 Posted by Keerthi

தசாவதாரம் ஆடியோ ரிலீஸுக்கு நானும் கமலஹாசனும் சென்றிருந்தோம்.
(ஹே ராமில் "நான் வாழ்ந்த ஊரிலே ஒரு ராஜா இருந்தானாம்" என்ற டையலாகை ஞாபகம் வைத்திருக்கும் பெருமக்களுக்கு நான் முதலில் சொன்னது புரியும்). உள்ளே நுழைய ஏற்பாடு செய்த நண்பர் ஷங்கருக்கும், நியாஸுக்கும் நன்றி.
வழக்கமான ஆடியோ ரிலீஸுக்கும் தசாவதாரம் ஆடியோ ரிலீசுக்கும் பல வித்தியாசங்கள். குறைந்த பட்சம் பத்தாவது இருக்கும். அதையெல்லாம் காலை நியூஸ் பேப்பரில் பார்த்துக்கொள்ளலாம், விடுங்கள்.
நேரு உள் விளையாட்டு அரங்கம் நிரம்பி வழிந்தது. சுருக்கமாகவும், அழகாகவும் தொகுக்கப்ப்பட்டது ( நடிகை ஷோபனா, வெகு அழகாக தொகுத்து வழங்கினார்). ஆடியோ ரிலீஸுக்கு இத்தனை ஹைப்பும், கூட்டமும் இதுவே முதல் முறையாக இருக்கக் கூடும். இன்விடேஷன் அதிகமான க்ரியேட்டிவிட்டி இல்லாமல் சாதாரணமாக இருந்தது.
முதல்வர் கருணாநிதி, சாக்கி ஜான் (கலைஞர் ஜாக்கி சானை இப்படித்தான் வரிக்கு வரி அழைத்தார்), அமிதா பச்சா (ஜாக்கி சான் அமிதாப் பச்சனை இப்படித்தான் அழைத்தார்), உலக மகா சிம்பிளாக மம்முட்டி, கருப்பு உடையில் விஜய், உடையே இல்லாமல் மல்லிகா ஷெராவத் (அதாவது கிட்டத்தட்ட), அப்புறம் ஆசின் (அசினை நிகழ்ச்சித் தொகுப்பாளினி ஷோபனா இப்படித்தான் அழைத்தார்), ஹேமா மாலினி, ஜெயப்ரதா மற்றும் கே.எஸ். ரவிக்குமார், தயாரிப்பாளர் ஸ்ரீதர், ராமநாராயணன் ஆகியோர் கலந்துகொண்டு ஒருத்தருக்கொருத்தர் தன் பெயரை மட்டும் விடுத்து பாக்கி மேடையில் இருக்கும் அத்தனை பேரையும் "...அவர்களே !!! ..... அவர்களே !!!" என்று போட்டு அழைத்துவிட்டு "வாய்ப்புக்கு விடை கூறி விடை பெறுகிறேன்.. நன்றி" என்று கூறிவிட்டு சமர்த்தாக சென்றுவிட்டார்கள்.
இளைய தளபதி விஜய், நான் கேட்டு முதல் முறையாக சுவையாகப் பேசினார். "ஸ்டூடண்ட் என்னதான் புத்திசாலியா இருந்தாலும் வாத்தியாரை வாழ்த்த தகுதி இல்லை.. வாத்தியார் ! வாத்தியார்தான்..." என்றார்.
தயாரிப்பாளர் ஸ்ரீதர் (ஆஸ்கார் ரவிச்சந்திரனின் சகோதரர்) பேசுகையில் "நாங்கள் முதன் முதலில் ஜாக்கி சானைப் பார்க்கச் சென்றிருந்த போது, சாப்பாடு பறிமாறிக்கொண்டிருந்தார். நாங்களும் சாப்பிட்டோம்... literally, we were eating out of his hands" என்றார். ஆஸ்கார் பிலிம்ஸ் ஜாக்கி சானின் இருபத்து ஐந்து படங்களின் இந்திய விநியோகஸ்த உரிமை எடுத்துக்கொண்ட நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார்.
ஜெயப்ரதாவும், ஹேமா மாலினியும், அசினும், மல்லிகா ஷெராவத்தும் கொஞ்சிவிட்டு ஓய்ந்துவிட்டனர். இவர்களுக்கெல்லாம் சுவாரஸியமாகப் பேசவே வராதா ?
மம்முட்டி வெகு சிம்பிளாகப் பேசினார். "நான் இவங்களையெல்லாம் பார்க்கலாம்னுதான் வந்தேன். இங்கே உட்காரவெச்சுட்டாங்க." என்றார்.
இதற்கெல்லாம் முன்னதாக கே. எஸ். ரவிக்குமார் சூப்பராக ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்துவைத்தார். "ஏம்மா மானி லம் மாறிப் போனீங்க ?" என்று ஹேமா மாலினியைப் பார்த்தும், "Mr. Jackie Chan, we have seen you fly in the air in your stunts. Today, we fly higher in happiness of your presence" என்று ஜாக்கி சானைப் பார்த்தும் என ரகளையாக பேசினார். "என்னோட எல்லாப் படத்துக்கும் தசாவதாரத்துக்கும் என்ன வித்தியாசம்னு நெறைய பேர் கேக்கறாங்க. வழக்கமா என் படத்துல "ரெய்ன் ஸ்டார்ட்" அப்டீன்னு சொன்னேன்னா மழை வரும். "கட்" அப்டீன்னு சொன்ன நின்னுடும். இந்தப் படத்துல "ஸ்டார்ட் சுனாமி" அப்டீன்னு சொன்னா சுனாமி வந்துச்சு.. "கட்" சொன்னா நின்னுச்சு. அந்த மாதிரி, மழைக்கும் சுனாமிக்கும் உள்ள வித்தியாசம் தான் மத்த படத்துக்கும் தசாவதாரத்துக்கும்" என்றார்.
அமிதாப் பச்சன் படு ஸ்மார்ட்டாக தோற்றமளித்தார். "நான் பேசுகையில் எதற்கும் நீங்கள் கை தட்டவில்லை.. கமலஹாஸன் என்று சொன்னால் மட்டும்தான் கை தட்டுகிறீர்கள். சரி ! நான் கை தட்டல் வாங்க ஒரே வழி... கமலஹாசன் !..." பலத்த கைத்தட்டல்.. "கமலஹாசன் !!!..." இன்னும் அதிக கைத்தட்டல். "கமலஹாசன்.. !!!!" அரங்கமே அதிர்ந்தது. "நன்றி.." என்று சொல்லிவிட்டு அமிதாப் சென்றுவிட்டார்.
கமலஹாசன், தெள்ளத்தெளிவாக தமிழில் புரண்டு விளையாடினார். எல்லாரையும் பாராட்டினார். "இந்தப் படத்தில் ஒவ்வொரு பாராட்டையும் எங்கள் குழுவினரைச் சாரும். இந்தப் படத









