Friday, June 23, 2017

நடை பழகு

"வா. வாக்கிங் போலாம்" என்று அனந்துவை அழைத்தேன்.

"ஓகே" என்று சொல்லி கிடு கிடு என்று பிஞ்ச செருப்பு ஒன்றை மாட்டிக்கொண்டான். எப்பொழுதுமே அதையே ச்சூஸ் செய்வதன் காரணம் அறியேன். "அதுவேண்டாம். ப்ளூ போட்டுக்கோ" என்று அவன் மகிழ்ச்சியையும் என் மானத்தையும் தராசில் நிறுத்தி, மானமே மானப்பெரிது என்று தீர்ப்பு வழங்கி கட்டளையாய் அவனிடம் திணித்தேன்.

ஹ்ம்ம்..  சாதா மேட்டருக்கெல்லாம் இப்படி சீமான் கணக்காய் பொங்கத் தேவையில்லையே.. ! ஆனால் இப்படி Responsible Parentஆய் யோசிப்பதுதான் டிரெண்ட். குழந்தைகளின் தனித்துவத்தைப் பேணுவது என்பது கேனத்தனமான ஒரு விஷயம், என்பது என் தனித்துவமான கருத்து.

எனிவே.. ப்ளூ க்ராக்ஸ் செருப்பு மாட்டிக்கொண்டு, படிகளில் துள்ளிக் குதித்து எனக்கு முன்பாக சென்று கொண்டிருந்தான்.

வீட்டிலிருந்தாலும், மழ மழ என்று தரைபுரள எட்டு முழ வேட்டியே கட்டியிருந்த நான், வேளச்சேரி குடிபெயர்ந்ததும், இரண்டு நாடா வைத்த அரை டிராயர் வாங்கி வைத்திருந்தேன். அதில் ஒன்றில் ஜம்ப் அடித்து நானும் அனந்துவுடன் கிளம்பினேன்.

ரெண்டுங்கெட்டான் காலை வேளை. மணி எட்டரை ஆகியிருந்தது. வீட்டில் இன்னும் இட்லி, குக்கரில் liquid state to solid state ஆகிக்கொண்டிருந்தது. கிழக்கு நோக்கி நடந்தோம். சுளீரெனச் சூரியன் அனந்துவைப் பார்த்துக் கண் அடித்தான்.

"அப்பா.. ஒம்ப ஹாட்டா இக்கு !" என்றான் அனந்து. இன்னும் "ர" வரவில்லை. நா பிரளவைக்க நானும் ப்ரயத்தனப்படுகிறேன்.

"இட்ஸ் ஓகே ! கொஞ்ச தூரம்தான், அப்புறம் நிழல் வந்துடும்" என்று அவன் கைபிடித்து இழுத்துக்கொண்டே நடந்தேன்.

ஏழுமாதமாக அயராது வேலையில் மூழ்கி இகபர துக்கங்களனைத்தும் அனுபவித்து, திடீரெனப் பனியாக விலகிய பளுவினால், ஒருவழியாக இலஃகுவாகியிருந்தொரு சனிக்கிழமை அது. குழந்தையோடு இன்றைக்கு ஒரு மெமரி செய்யவேண்டும் என்ற முனைப்பில், இந்த நாள் முழுதையும் கழிக்க எண்ணம்கொண்டிருந்தேன்.

"லுக்.. ப்ளாக் டாக்" என்று நின்றான். அனந்துவுக்கு அத்தனை அனிமல்ஸும் இஷ்டம். கண்களாலேயே வாஞ்சையாகத் தடவிக்கொடுப்பான். கிட்ட நெருங்கினால் பயம். நானும் நின்றேன். எங்கள் இருவரையும் அந்த நாய் முனைப்பே இல்லாமல் படுத்துக்கொண்டே பார்த்தது. காலைச் சோம்பல். கதகதப்பாக மண்ணில் தனக்கென ஒரு நிழலான ஒரு இடத்தில் மெத்தை அமைத்து அன்றைய தேவையை பூர்த்தி செய்துவிட்டது. நிம்மதியை எங்கு கண்டாலும் மனதில் பொறாமை இழையோடுகின்றது. உடனே, சுய பச்சாதாபம் கொஞ்சமும், டிஃபென்ஸிவ் திங்கிங்கும் வந்துவிடும். அடுத்த வேளை சோத்துக்கு கஷ்டப்படும் தெரு நாய் அது. எனக்கு சுடச்சுட இட்லி வீட்டில் காத்துக்கொண்டிருக்கிறது.. ப்சே.. என்ன லூஸுத்தனமாக யோசிக்கிறோம்.

அனந்து குந்திக்கொண்டு உட்கார்ந்து நாயை ரசித்துக்கொண்டிருந்தான். தெருவில் யாரையும் காணோம். காற்று, வாசனை, நாத்தம், வண்டிச்சத்தம், குக்கர் விசில் என எந்தச் சலனமும் இல்லாத காலைப்பொழுதாக நகர்ந்துகொண்டிருந்தது.

"இப்பொ எப்படிப் போகனும் ?" என்று அனந்துவிடம் கேட்டேன். பாட்டியோடு தினமும் நடந்து இந்த நகரின் டோப்பாலஜி தெரிந்திருப்பான்  என்பது என் கெஸ். ஊர்ஜிதப் படுத்தினான். "இப்டி போய்.. பாக்கி பால்" என்றான். அந்த தக்குணூண்டு விரல் காட்டிய திசையில் ஒரு பாஸ்கெட் பால் கோர்ட் இருந்தது.

அனந்துவுக்கு பேச்சு மெதுவாகத்தான் வருகிறது. கொஞ்சம் வருத்தம்தான். ஆனால், மூணுவயதில் திருக்குறள் ஒப்பிக்கவைக்கும் ஆம்பிஷன் எனக்கு இல்லை என்பதால், not that disappointed. வார்த்தைகள் மழலையாய் விழுகின்றன. வாக்கியங்கள் தான் வரவில்லை. அதெல்லாம் வந்தப்பிறகு மோடி மாதிரி தளை தட்டாமல் பேசுவான் என்பது என் பேரவா. அதிகமாக ஆங்கிலத்தில் பேசுகிறான் அனந்து. தமிழை வண்ணாரப்பேட்டை ஸ்லாங்கில் பொளக்கிறான். ஒரு பக்கம் "நான் சேர்ல உக்காசினேன்" என்கிறான். மறுபக்கம் "ஐ ரெஸ்க்யூட் தி எலிஃபண்ட்" என்று அதிர வைக்கிறான். ஏதோ குழம்பி கலந்துகட்டி கம்யூனிகேட் செய்து விடுகிறான். வளரட்டும் பார்த்துக்கொள்ளலாம்.

பாஸ்கெட் பால் கோர்ட் தாண்டி இன்னும் நடந்துகொண்டிருக்கிறொம். அனந்துவுக்கு கால் வலிக்குமோ.. தூக்கு என்று சொல்லவில்லை. ஆசையாக உரையாடிக்கொண்டே வருகிறான். எது பார்த்தாலும், "லுக் அப்பா !" என்று எனக்கும் காண்பிக்கிறான். அவன் பார்வையில் உலகம் அதிசயம் நிறைந்ததாகவே இருக்கிறது. வேளச்சேரியின் வி.ஜி.பி நகரில் நித்ய-கன்ஸ்ட்ரக்ஷன் நடந்துகொண்டே இருக்கும். மலையாகக் குவிந்திருந்த மணல் ஜல்லியெல்லாம் வியந்தபடியே நகர்ந்தோம். நானும் அவனுடன் ரசித்தபடியே.

அனந்து தினமும் விளையாடும் ப்ளே க்ரவுண்ட் வந்தது. குழந்தைகள் யாருமே இல்லாத ப்ளேக்ரவுண்ட் மயானமய்த் தெரிந்தது. கையை விருட்டென்று இழுத்துக்கொண்டு, ஓடிப்போய் ஸ்விங்கின் அருகில் நின்றான். நானும் நுழைந்தேன். அப்புறம் ஸிஸா அருகில் ஓடி "ஸீஸா !" என்றான். ஒவ்வொரு விளையாட்டாக எனக்கு அறிமுகம் செய்தான். ஸ்லைடின் மேலேறி "லுக் அப்பா ! ஸோ டால் !!" என்றான்.  "அது முஞ்சுச்சு.. அது முஞ்சுச்சு.. அது முஞ்சுச்சு.. அது முஞ்சுச்சு.. "என்று வரிசையாக எல்லா கரணங்களிலும் விளையாடி முடித்ததாக அறிவித்தான். "லெட்ஸ் கோ ஹோம் !" என்றேன். "நோ !! நீ அங்க உக்காசு !" என்று பார்க் பெஞ்சைக் காண்பித்து அமர்வித்தான். மீண்டும் ஒரு ரவுண்டு எல்லாவற்றிலும் விளையாடினான். ஸ்விங்குக்கும் சறுக்குமரத்துக்கும் போட்டியே இல்லாமல் சுரத்து கம்மியாக இருந்ததால், அவனும் கிளம்பிவிட்டான்.

வெயிலின் கடுமை அதிகரிக்க ஆரம்பித்திருந்தது. இருவர் போட்டிருந்த டி-ஷர்ட்டும் வியர்வைமேவ உடம்பை ஒட்டத் தொடங்கியது. என் ஒற்றை விரலில் அவன் கைகளால் என்னைப் பற்றி பிஞ்சுக்காலடி பூமியில் தாளம்போட்டு நடையைத் தொடர்ந்துகொண்டிருந்தான். இடதுபக்கம் திரும்பினால் வீடு வந்துவிடும்.

லட்சியம், வீடு, கார், பணம் என்று தேடிக்கொண்டிருந்த வாழ்க்கை அப்படியே அனந்துவுக்காகவே மாறியது எப்போது என்பதை அறியாமல் அவன் காலடித்தாளத்துக்கு ஜதியாக நானும் நடந்துகொண்டிருக்கிறேன்.

My life is changing, One step at a time.

Sunday, June 29, 2014

சுபஜனனம்

"சார்.. இன்ஷூரன்ஸ் க்ளியர் ஆயிடுச்சா.."
"ஸ்ரீலக்ஷ்மி தானே... பாத்துட்டு இருக்கோம் சார்.. உங்கள்துதான்.. கொஞ்சம் லேட்டாவும்.. ரூமுக்குப் போங்க.. ஃபோன் பண்ணி சொல்லறோம்."
"தாங்க்ஸ்.. கொஞ்சம் சீக்கிரம் முடிச்சுருங்களேன்.. !"
"பாத்துட்டுதானே இருக்கோம். இந்த சாரைப் பாருங்க"
ஒரு அவஸ்தையான முகத்துடன் உட்கார்ந்திருந்த ஒருவரை நோக்கி கை காட்டினார்.
"இவரு, நேத்திலேந்து வெய்ட்டிங். சிஸ்டம்ல அப்ரூவல் வந்துருச்சுன்னா உடனே டிஸ்சார்ஜ் பண்ணிரலாம்."


சனிக்கிழமை வேறு. இன்னிக்கு டிஸ்சார்ஜ் ஆனாப்லதான் என்று ரூமுக்கு வந்தேன். மணி ரெண்டேகால்.

மூன்று நாட்களுக்கு முன்னால் டெலிவரி. நினைவில் இன்னும் நுணுக்கமாய் ஞாபகம் வருகிறது.

நானும் பல சினிமாக்கள் பார்த்து, லேபர் வார்டுக்கு வெளியில் குறுக்கவும் நெடுக்கவும் வாள்நுதல் நெற்றியில் கீற்றாய் ஒரு வியர்வைத் துளியுமாய் நடப்பதுதான் தந்தையாகப்போகிறவனின் முதல் கடமை என்று நம்பியிருந்தேன். The first step as a father is the several steps outside the delivery room. ஆனால், அந்த சமயம் என்று வரும்போது, வயிற்றில் தானாய்ப் பட்டாம்பூச்சி பறந்தது. பட்டாம்பூச்சியா அது ? பதினைந்து பருந்துகள் மாதிரியல்லவா இருந்தன. நிலையாக உட்கார முடியவில்லை. எழுந்து நடப்போம் என்று என்னைக்கேட்காமலேயே வாலன்டரி ரிஃப்ளெக்ஸாக எழுந்து நடப்"கங்ராட்ஸ். அப்பா ஆயாச்சு." என்றார் நர்ஸ்.

நான் பார்க்கவே பார்திறாத, பழகாத, தெரியாத ஒரு உயிருக்காக அனிச்சையாக கண்ணீர் மல்கியது. சுற்றியிருந்தவரெல்லாம் கை கொடுத்தனர். தன் மகனைத் தந்தை எனக்கேட்ட தாயாக என் அம்மா அடைந்த சந்தோஷத்தை வார்த்தையில் விவரிக்க முடியாது. "அய்யனாரப்பா !" என்று கை கூப்பி நன்றி சொன்னார் என் அப்பா. யாரும் வீணை வாசிக்காமலே, அந்தக் கூச்சல்களெல்லாம் ஒரு மங்கள இசையாக என் காதிலும், என் நினைவுகளிலும் இன்னும் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கின்றன. ஒன்பதரை மாதம் சுமந்த கரு வெளியில்வந்து தன்னைப் பார்த்து "தோ, வந்துட்டேன்" என்று சொல்லாமல் சொல்லும் அந்தப் பார்வை அவளுக்கு அந்த வலியிலும் எத்தனை மகிழ்ச்சி அளித்திருக்கும் !

 "சார், உங்க குழந்தைக்கு போஸ்ட் பெய்ட் கனெக்ஷன் வாங்கிக்கிறீங்களா ?" என்று ஏர்டெல்காரர்களுக்கே தெரிய்மளவுக்கு செல்போன்களில் செய்திகள் பறந்தன. அடையார் ஆனந்த பவனில் லட்டு பிடிக்க ஆரம்பித்தனர். குழந்தைக்குத் தேவையான சமாச்சாரங்கள் விற்கும் கடையை "இன்னிக்கு நல்ல கிராக்கி வரும்" என்ற நம்பிக்கையோடு ஒருவன் திறந்து கொண்டிருந்தான். பொண்ணு கிடைச்சாலும் புதன் கிடைக்காது. புதன்கிழமை காலையில் பையன் கிடைச்சுது. ஸீமந்தோன்னயனத்தில் முள்ளம்பன்றியின் கூரிய முள்ளால் வகிடெடுத்து வாறி, ஆல மரக்கிளையைப் பிழிந்து மூக்கில் மூன்று துளிகள் விட்டு "பும்ஸவனம் !" என்று அவள் சொல்ல சீமந்த புத்திரன் பிறக்கவேணுமென பிரார்த்தித்து "பூர் புவ ஸ்வஹ் இதம் அனந்தாய இதம் ந மம:!" என்று சொல்லியதற்கேர்ப புருஷோத்தமன் பிறந்த ரோஹிணி நட்சத்திரத்தில் சுபஜனனம்.

மணியடித்தது. இரண்டரைதான் ஆகியிருந்தது.
"சார். கீழே வர்ரீங்களா ? இன்சூரன்ஸ் அப்ப்ரூவல் வந்துட்டு. சீக்கிரம் வந்தீங்கன்ன எவ்வளவு பேமென்டுன்னு சொல்லிருவேன்".

மூணு பத்துக்கு வெளியில் வந்தாகிவிட்டது.

எனது கார் கூடையானது. நான் வசுதேவனானேன். பின்னால் வந்த கார்கள் அனைத்தும் ஹாரனடித்து மங்களகோஷம் எழுப்பினர் (அவ்வளவு மெதுவாக ஓட்டினால், அடிக்காமல் என்ன செய்வர்).  அதுவரை பளிச்சென இருந்த மேகம் இருள ஆரம்பித்தது. புயல் போல காற்றடித்து சாலையெல்லாம் சுத்தமானது.  (சனிக்கிழமை மதியம் சாலையில் சென்றவர்களுக்கு நான் சொல்வது உண்மையெனப் புரியும்).

ஆதம்பாக்கத்தில், மாமனார் வீட்டுக்குச் செல்லும் தெரு திரும்பும்வரை இருண்டிருந்த மேகம், சடாரென மழையாகப் பொழிந்து சாலைக்கு தண்ணீர் தெளித்து சுத்தப்படுத்தியது. வீட்டு வாசலில் கார் நின்றபோது, ஒரு கடலே வானத்திலிருந்து கீழ் விழுந்ததுபோல கனமழை. கதவு திறக்காமல் வெகு நேரம் வாசலிலேயே நின்றது காரும், காருக்குள் நாங்களும். பொறுக்க முடியாமல், ஆதிசேஷனாய் மாமனார் குடைபிடிக்க கொட்டும் மழையில், ஒரு துளி அவன் பாதம் பட்டு அவனை உள்ளே அழைத்துச் சென்றேன்.

திரும்பவும் காருக்கு குடையுடன் வந்து மனைவி, அப்பா, அம்மாவை வீட்டுக்குள் கொண்டுவருவதற்குள் தொப்பமாய் நனைந்து, பேண்ட் ஷர்ட் எல்லாம் கழற்றி, வேட்டி அங்கவஸ்திரம் தரித்து, பத்து மாச தாடியுடன் மகாபாரதத்தில் காண்பித்த அதே வசுதேவராட்டமே இருந்தேன். (கொஞ்சம் பூசிய வசுதேவர்).

எல்லாமே சாதாரண சம்பவங்கள்தான். இருந்தாலும், நம் கற்பனையில் கதை கட்டிக்கொள்ள நமக்கு உரிமை உண்டுதானே.

"உங்க பையன் மெட்ராஸுக்கு மழையைக் கொண்டுவந்துருக்கான் !" என்று சிலர் உசுப்பிவிட "இவன் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை" என்று சிலாகித்தேன்.  குழந்தையைத் தூங்கவைத்து வாஞ்சையாய் முத்தமிட்டு வில்லிவாக்கம் திரும்பினேன். பிருந்தாவனத்தில் மூன்று மாதம் மகன் வளர (மாமியார் பெயர் பிருந்தா, தெரியுமோ ?!) ஆரம்பித்திருக்கிறான்.

Thursday, June 05, 2014

Nausea

விருமாண்டி படத்தில் "கருமாத்தூர் காட்டுக்குள்ளே" பாடலில் வரும் வரி..

சைவவாடையது கொஞ்சமும் சகிக்கவில்ல
தாக்கி முகம் சுழிக்க வைக்குது
என்று செங்கண் துடிதுடிக்க அங்கம் பளபளக்க
போங்கினானே பேய்க்காமனே!

சைவ சமையலின் - அதாவது பொங்கல் வைத்துப் படைக்கும் பேச்சியம்மாவின் சமையலின் - வாசனை முகம் சுளிக்க வைக்கிறதாம் பேய்க்காமனுக்கு. அதெப்படி !.. அசைவ சமையலாவது அப்படிச் சொல்லலாம்.. பொங்கல் நல்லா கமகமன்னுதான...ே இருக்கும் ? ஒரு கதாபாத்திரத்தின் குரூரத்தை இது காட்டுகிறது. நீட்டி முழக்கி ஒரு கதாபாத்திரத்தை எழுத்தில் செதுக்க முடியும். ஆனால், ஒரு பாடலில் ஆரம்பித்து, மூன்றாவது பத்திக்குள் ஒருவன் தீயவன் என்று கேரக்டர் பில்டப் செய்திருக்கிறது இந்தப்பாடல். "மாட்டுக் குடல் எடுத்து மாலையாகப் போட்டுத்தான், பேச்சியம்மா இடத்துக்கவன் வந்தானே" என்று பாடல்வரி வரும்போதே நம் மனம் "பேய்க்காமன்" குணத்தை Evil = Evil + 1; என்று கணக்கெழுதிக்கொள்கிறது.

ஆங்கிலத்தில் "ஸேவ் தி கேட்" என்று ஒரு புத்தகம் உண்டு - திரைக்கதை எழுதுபவர்களுக்காக. அதில் இந்த "ஸேவ் தி கேட்" என்னவென்றால், பழங்காலப் படங்களில் கருப்பு வெள்ளையிலும் வெள்ளையாக ஹீரோ திரையில் நுழையும்போதே ஏதாவது நல்லது செய்வார்... உதாரணத்துக்கு ஒரு விழப்போகும் அல்லது அடிபடப்போகும் பூனையைக் காப்பாற்றுவார். ஒரே காட்சியில் எப்படி இரத்தின சுருக்கமாக ஒரு கருத்தை அல்லது குணாதிசயத்தை உணர்த்துவது என்பது உட்பட ஒவ்வொரு காட்சியையும் எப்படி "பத்தி பத்தியான" கதையை திரைக்கு ஏற்றார்போல் காட்சியாக எழுதுவது என்று விளக்கும் புஸ்தகம். நானும் வாங்கிப் படித்திருக்கிறேன்.. இன்னும் திரைக்கதைதான் எழுதவில்லை. இதையெல்லாம் ஏன் யோசிக்கிறேன் ?!

இப்படித்தான்.. மனம் எங்கேயோ ஆரம்பித்து எங்கெங்கோ அலைந்து சம்பந்தமே இல்லாமல் எங்கோ சென்று சிந்தனை ரயில் தடதடத்துத்தடம்புரண்டுவிடுகிறது. எதற்காக இதை எழுத ஆரம்பித்தேன்.. ?

Mediocrity என்ற வார்த்தைக்கு நிகரான தமிழ் வார்த்தை தெரியவில்லை. "சாதாரணம்" என்று சாதாரணமாகச் சொல்லமுடியாது. Because, Mediocrity சாதா-ரணமல்ல. அவஸ்தையான-ரணம். உதா-ரணத்துக்கு இன்று காலை விஜய் டி.வி யில் "விஜய் அவார்ட்ஸ்"ஸில் சிவகார்த்திகேயனும், திவ்யதர்ஷினி என்று யாராலும் அழைக்கப்படாத டிடியும் விருது வாங்கி நெகிழ்ந்த்தகமகிழ்ந்து கண்ணீர் மல்கி மைக்கில் பேசியதைப் பார்த்தேன். பெரும்பான்மையான மக்களால் விரும்பப்படும் இவர்கள் மீது எனக்கொன்றும் வருத்தம் இல்லை. ஆனால், Excellenceக்கான இலக்கு இவ்வளவு ஈசியாகப்போனதுதான் வருத்தம். The bar is just too low. அதேன் சார், "86%தான் வாங்கினியா ?" என்று +2 மார்க்கில் குறை படுகிறோம். "பையன் வெறும் பிஃப்டி தவுஸண்ட்தான் வாங்கறானா ?" என்று ஜாதகமே பார்க்காமல் ரிஜெக்ட் செய்கிறோம். ஆனால், இந்த சினிமா டிவிக்களில் மட்டும் சிலரை காரணமே இல்லாமல் புகழ்ந்து, கொஞ்ச நாட்களில் சினிமாவில் நடிக்கவைத்து அப்படியே மாபெரும் Legendகளாக்கி விடுகிறோம்.. ! நாங்க எங்க செய்யறோம்.. ? அவிங்களா செஞ்சுக்கிறாங்க என்கிறீர்களா ?

கரெக்ட். உண்மைதான்.. அவர்களாகவே அவர்களைப் பாராட்டிக்கொள்கிறார்கள். சுமாராகப் பாடினாலே ஸ்டாண்டிங் ஓவேஷன். குத்தாட்டம் ஆடினாலும், பத்மினி நாட்டியம் ஆடிய அளவிற்கு "உங்க டேன்ஸில் அத்தனை பெர்ஃபெக்ஷன்.. உங்க தீம் இஸ் டிவைன்" என்று புகழ்கிறார்கள். பாராட்டெல்லாம் ரொம்ப சுலுவாகக் கிடைக்கும் மாயை தெரிகிறது. இருந்தாலும், அது வெறும் பொழுதுபோக்குத்தானே என்று உதாசீனம் செய்யலாம்தான். அப்புறம் என்னத்துக்கு ஃபேஸ்புக்கும், பிளாகும்.

சினிமா, டி.வி. மட்டுமில்லை.. பல்வேறு தளங்களில் mediocrity accept செய்யப்படுகிறது. ஏன் என்று கொஞ்சமாக யோசித்துப் பார்த்தேன். இந்த "appreciation", "motivation" எல்லாம் இருக்கிறதே.. அது யார் எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதில் இருக்கிறது சூட்சமம். சிலர் அடுத்தவர் மோட்டிவேஷனில்.. சிலர் சொந்த மோட்டிவேஷனில்.. இந்த உந்துதல் இல்லாமல் பயணம் இல்லை. ஆனால் Excellenceக்கான பயணம் என்கு நிற்கிறது ? பல காரணங்கள் உள்ளன..ஒவ்வொருத்தருக்கும் வெவ்வேறு காரணங்கள். ஆனால், திருப்தி அடையாதவர்கள் மட்டும்தான் அடுத்த கட்டத்துக்கு தங்கள் ஆற்றலை push செய்கிறார்கள். "Stay hungry" என்று ஸ்டீவ் ஜாப்ஸ் சொன்னாரே.. அதன் அடிப்படைத்தத்துவம் அதுதான். ஆனால், கொஞ்சம் சாத்தித்த உடனேயே - அதாவது "சாதாரணமாக" எதையாவது செய்தாலே, "எதையும் பாராட்டாத சமுதாயம். அதில் நான் அடக்கமில்லை.. இதோ வழங்குகிறேன் என் அளவில்லாப் பாராட்டை" என்று மழையாய்ப் பொழிந்து தள்ளுகிறார்கள்.

இந்த மாதிரி Mediocre சாதனைகளுக்கு புகழ்ச்சி ஏற்படும்போதுதான் சகிக்காமல் "தாக்கி முகம் சுழிக்க வைக்குது". I feel nauseated on appreciation towards mediocrity, leave alone mediocrity.

அப்பொழுதுதான் விருமாண்டி பற்றி யோசித்தேன்.

ச்சே.. ! என்னமா யோசிக்கிறேன்.

Tuesday, December 24, 2013

ஓராயிரம் வார்த்தைகள்

இந்தக் கடவுள்கள் எல்லாம் காலையை எப்படித்தான் கழிக்கிறார்களோ, தெரியவில்லை.. ஆனால், மனிதர்கள் எல்லாம் விஜய் டி.வி யைப் போட்டு பக்தி வெள்ளத்தில் பகவானை தெளியவைத்துத் தெளியவைத்து மூழ்கடிக்கிறார்கள். பக்திப்பரவசத்தில் காதில் பால் ஊற்றினால் ஒரு நிமிடத்திற்குள் தயிர் ஆகும் அளவுக்குப் புளிக்கிறது. புரானக் கதை சொல்பவர், தன் இஷ்டத்துக்கு தான் நல்லது என்று நினைப்பதையெல்லாம் பகவான் சொன்னதாகவும், உணர்த்துவதாகவும் சொல்கிறார். தெருவுக்குப் பத்து கோயில் இருக்கும் தமிழகத்தில் சென்ஸஸ் கணக்குப்படி ஒரு பதினைந்து லட்சம் கடவுள்கள் இருப்பார்கள். இவர்களையெல்லாம் விட்டு விட்டு புரந்தரதாசரை "பம்பாய் நடிகை" கணக்காய் நம்மூருக்கு இட்டாந்து பாண்டுரங்க பஜனை பாடிக்கொண்டிருப்பார்கள். இதிலே இந்த பஜனை பாட சங்கீத ஞானமோ, குரல் வளமோ தேவையில்லை போலும். "விட்டலா !!!" என்று டோலக்குக்குப்போட்டியாக ரிதம் போட்டுப் பாடினால், ஆடியன்ஸில் ஒரு மாமி சீட்டுக்கு வெளியே வந்து முதுகிலிருந்து திருப்பாச்சி அருவாள் எடுப்பதுபோல, இரண்டு கோல்களை எடுத்து  நயமாக (கொஞ்சம் பயமாகவும்) ஆடுகிறார். போட்டிக்கு ஒரு மாமா, இருந்த இடத்தில் இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு எம்பி எம்பி குதித்து தன்னைப் பாண்டுரங்கஸ்வரூபமாக எண்ணிக்கொண்டு ஆடுகிறார். இதெல்லாம் உண்மையான பக்திதானோ என்னவோ.. போகிற போக்கில் பகவானே நாத்திகனானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எனக்கு மட்டும் சேனலை அவசரமாக மாற்றவேண்டும் என்ற சிந்தையுள் நின்றததனால் , அவனருளாலே அவன் தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சேனலை மாற்றினேன்.

Tuesday, May 28, 2013

கஷ்டகாலம்


ஆடியபாதம் வீட்டில் பவர் கட்டாகியிருந்தது. மணி இரவு பத்தைத் தாண்டிவிட்டது. அவர் வீட்டில் இன்வர்ட்டர் பேட்டரி ரிப்பேர் வேறு. சுழலாத காற்றாடியும் எரியாத மின்விளக்கும்தான் இனி தமிழ்நாட்டின் தேர்தல் சின்னங்கள். இரண்டு மணி நேரம் மின்சாரம் தினம் மிச்சம் பிடித்தது போக உபரியாக இப்படி இரவில் அணைத்து ப்ராணனை வாங்குகிறார்கள் கிராதகர்கள்.



ஆடியபாதத்திற்கு கும்பகோணம் பூர்வீகம். அங்கிருந்து பிச்சையான பிச்சையடித்து டிரான்ஸ்ஃபர் வாங்கி குழந்தைகள் படிப்பிற்காக சென்னை வந்து தினம் க்ளோரின் தண்ணியில் தலைக்கு குளித்ததாலும், நடுத்தர வர்கத்தின் கனக்கும் சுமைகளின் வலியினாலும் தலைமுடியெல்லாம் கொட்டி, அங்கே தடையில்லாமல் வியர்வை அருவியாய் கொட்டிக்கொண்டிருந்தது. குத்தாலத் துண்டை ஈரத்தில் நனைத்துப்பிழிந்து சட்டை போடாத உடம்பில் சுற்றிக்கொண்டார். ஒரத்தில் லேசாகத் தையல் பிரிந்த இரும்பு ஈஸி சேரில் அன்-ஈஸியாக உட்கார்ந்திருந்தார். வெளியை விட உள்ளே அதிகப் புழுக்கம்.



"வந்துப் படுங்க.. அரை மணி நேரத்துல வந்துரும்".

"...."



ஆடியபாதம் காதில் இதுவும், இதற்கு இருபது மணி நேரம் முன்னரிலிருந்து பேசியது எதுவுமே விழவில்லை. மனம் வேறெங்கோ சிக்கியிருந்தால், சதா திறந்த காதும் இறந்த காதுதான்.



ஏழையாகிப்போன பணக்காரக் குடும்பத்திலிருந்து வந்தவர் ஆடியபாதம். பதினைந்து வயதிலிருந்தே முதுமை ஆரம்பித்துவிட்டது. படிக்கும்போதே பாத்திரக் கடை வேலை செய்து அப்பாவின் எஞ்சிய சில நிலங்களில் பலதை விற்று அக்காவுக்கு கல்யாணம் செய்தாயிற்று. வேண்டாத சகவாசத்தால் சீட்டுக் கச்சேரியில் பாகவதராகிப்போனார். தீம்பழக்கத்தால் கொஞ்ச கொஞ்சமாக வருமானமும், கடைசியில் வேலையும் முற்று பெற்றது. அம்மா ஒரு நாள் ஒப்பாரிவைத்து உடம்பில் மண்ணென்னெய் ஊற்றி மிரட்டியதினாலும், வைத்து ஆட பத்து பைசா கூட இல்லாததாலும் சீட்டுப் பழக்கம் தற்காலிகமாக தடைபட்டது. பக்கத்துவீட்டுக்காரர் சிபாரிசில் பெரியகடைத் தெருவில் வேறொரு பாத்திரக்கடையில் அதே வேலை கிடைத்தது.



தூரத்து உறவில் கொஞ்சம் எழ்மையான பெண்ணொருத்தியை அம்மா தாமதமில்லாமல் கல்யாணம் செய்துவைத்தாள். ஆடியபாதமும் தன் பங்குக்கு தாமதமில்லாமல் இரண்டு பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார். மனைவிவழிச் சொந்தத்தில் இருந்த பெரியபுள்ளி ஒருவர் மூலம் பேங்க் வேலை கிடைத்தது. பெண் குழந்தைகளும், வட்டிக் கடனும் அவர் வயதோடு வளர்ந்தன. மனைவி மட்டும் தனக்குத் தெரியாமல் ரகசியமாக மிச்சம் பிடித்து சேமிக்கிறாள் என்று அவருக்குத் தெரியும். செக்கண்ட் ஹாண்ட் சைக்கிள், டிவிஎஸ் ஃபிஃப்டி ஆனது. சம்பளம் ஹீனமாக உசர்ந்தபோதெல்லாம், ஏதாவது பெருஞ்செலவு வந்து உட்கார்ந்தது. அம்மா பக்கவாதம் வந்து மூன்று வருடம் கழித்து காலமானார். மகள்கள் தனித்தனியாக பெரியமனுஷி ஆனார்கள். இருவரில் ஒருத்தி நன்றாகப் படித்ததால், ஒரு பக்கம் சந்தோஷமாகவும், மறுபக்கம் செலவாகவும் அவரை இடித்தது.



கட்டாயம் சென்னையில் தான் படித்தாகவேண்டும் என்று பிடிவாதம். பெண்ணைத் தனியாக அனுப்பக்கூடாது. டிரான்ஸ்ஃபர் கேட்டு அலையாய் அலைந்தார். காலேஜ் அட்மிஷனும் டிரான்ஸ்ஃபரும் ஒருசேரக் கிடைத்தது. நடுத்தர வர்கம் ஒரு கவலை முடிந்தபின் ஆவலாக அடுத்த கவலையைத் தேடிச் செல்கிறது. இவளுக்கு கல்யாணம் செய்தாக வேண்டும். சின்னவளுக்கும் சேர்த்துச் செய்தால் நல்லது. சென்னைக்கு வந்து இரண்டு வருடங்கள் ஓட்டமாய் ஓடிவிட்டன. இன்னும் ஜாதகம் எடுத்தபாடில்லை. மனைவியிடம் கேட்டேவிட்டார், செமிப்பு பற்றி. பன்னிரெண்டு வருடங்களில் ஒன்னேகால் லட்சம் சேர்ந்திருந்தது. அவர் அதிகம் எதிர்பார்த்திருந்தார். கல்யாணம் செய்ய நாலு லட்சமாவது செலவாகும்.



மகள் மேலே படிக்க ஆசைப்படுவாள். சின்னவள் கல்லூரியில் அடுத்த செமஸ்டர் ஃபீஸ் கட்டுவது கஷ்டம். மனைவிக்கு கிரியேட்டனின் சரியில்லை. கரண்ட் வேற கட்டாகிவிட்டது.



"தூங்கிட்டீங்களா ?!"

"ம்ஹும்."

"என்ன யோசனை.."

"ம்ம்.."



ஆடியபாதத்திற்க்கு வியர்வை நின்றபாடில்லை. மனைவிக்குத் தெரியாமல் ஒன்னேகால் லட்சத்தை அவர் நேற்று எடுத்திருந்தார். எத்தனை பெரிய துரோகம். தெரிந்தால் ரணமாக்கிவிடுவாள். பொறுப்பில்லாமல் நடந்துகொண்டுவிட்டோமா ?! ஸ்ரீநிவாஸா ! பொண்ணு கல்யாணம் நல்லபடியா நடக்கனும்டா சாமி ! வெறுமையில் நெஞ்சு வலித்தது. இயலாமையில் கண்கள் கலங்கியது.



இருட்டான அரையில், நிசப்தத்தை கலைத்து செல்போன் சினுங்கியது. எஸ்.எம்.எஸ்.



"CSK down. 23 runs. We win." என்றது.



ஆடியபாதம் வெறிகொண்டு கையை ஓங்கி உசத்தி "Yessss !!" என்று கத்தினார். ஸ்ரீநிவாஸன் சிரித்துக்கொண்டிருந்தார்.

Sunday, January 06, 2013

விஸ்வரூபம் !

Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee
Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai
Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, N
yabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru P
urigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Theri
giradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sar
ithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Va
rugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha
! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha !
Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Pa
daippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha
! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Th
ee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigala
i Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan,
Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru
Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena The
rigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru S
arithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam
Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigirad
ha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha
! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram
Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradh
a ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan
Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaiga
lai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippava
n, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarend
ru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena T
herigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru
Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabaga
m Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigir
adha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradh
a ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithira
m Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugira
dha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Iva
n Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadai
galai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippa
van, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yare
ndru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena
Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vend
ru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyaba
gam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purig
iradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigira
dha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithi
ram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugi
radha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! I
van Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thad
aigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaip
pavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Ya
rendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee E

KRTY 2013