Friday, May 04, 2007

முக்காத செய்திகள்

முக்காத செய்திகள்.

ரெளடித்தனம் செய்த தொழிலதிபர் மீது தமிழக மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

நாரத கான சபாவில், டான் பாஸ்கோ பள்ளி செகண்ட் பி மாணவி ரேஷ்மாவின் அரங்கேற்றம் நடைபெற்றது. அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற நமது அப்பாவி ப்ளாகர் மச்சி நிருபர் "உங்க கொழந்தையோட சாகித்தியத்தை பரிசோதிக்கனும்.. கொஞ்சம் மன்மத ராசா பாடச் சொல்லுங்கோ" என்ற உடன் கொதிதெழுந்த ரேஷ்மாவின் தந்தை நிருபரின் சட்டையை பிடித்து அரங்கத்துக்கு வெளியே தள்ளினார்.

இதைக் கண்டித்து ப்ளாகர் மச்சி நிருபர் அரங்கத்துக்கு வெளியே பதினைந்து நிமிடங்கள் தொடர் உண்ணாவிரதம், அடுத்த அரை மணி நேரத்துக்கு மெளனவிரதம் என்று சத்தியாகிரக முறையில் போராட்டங்கள் நடத்தினார்.

இதை எல்லாத்தையும் விட கொடுமையாக, செகண்ட் பி மாணவி ரேஷ்மா அரங்கத்தை விட்டு வெளியே சொல்லும் போது வலது கை கட்டை விரலை மூக்கிலும் பாக்கி விரல்களை ஆட்டியபடியும் மூஞ்சி காமித்துக்கொண்டே சென்றார்.

பாதிக்கப்பட்ட நிருபர் தனது கையை கக்கத்துக்குள் இடுக்கி வைத்து "ஐ ! ஐ !" என்று பதிலுக்கு மூஞ்சி காமித்தார்..

பிறகு டீ கடை கோபாலிடம் "எனது போராட்டம் முழுமையான வெற்றி !" என்று அறிவித்துள்ளார்.

----

2 comments:

Unknown said...

:-)))

Kumar said...

ப்ளாகர் மச்சி நிருபருக்கு வாழ்த்துக்கள்.
அடுத்த பீட் எங்கே?


"பாதிக்கப்பட்ட நிருபர் தனது கையை கக்கத்துக்குள் இடுக்கி வைத்து "ஐ ! ஐ !" என்று பதிலுக்கு மூஞ்சி காமித்தார்.."

அடுத்த முறை office-ல் பாஸ் கோபமாய் முறைக்கும் போது இந்த சீன் நினைவுக்கு வராமல் இருந்தால் சரி.

கலக்கறீங்க!