Monday, January 18, 2010

ஐ ஹேவ் அ ட்ரீம்

Rosa Parks

இன்று அமெரிக்காவில் "மார்டின் லூதர் கிங் ஜூனியர் தினம்". விடுமுறை.

படத்தில் நீங்கள் காண்பது "ரோஸா பார்க்ஸ்" என்ற பெண்மணியின் முழு உருவச்சிலை. டேலஸ் டௌன்டௌனில் நிறுவப்பட்டிருக்கும் இந்தச் சிலைக்குப் பின்னால் ஒரு கதை இருக்கிறது.

1955 வருடத்தில், நிறபேதங்களின் உச்சக்கட்ட நாட்களில், ரோஸா பார்க்ஸ் என்பவர் மான்ட்கோமரி என்ற அலபாமா நகரத்தில் ஒரு பஸ்ஸில் ஏறினார். அமர்ந்தார். அவர் அமர்ந்த இருக்கை, கறுப்பு நிற மக்களுக்கா ஒதுக்கப்பட்டது.. பேருந்தின் முன் பக்க இருக்கைகள் பத்து - வெள்ளை நிற மக்களுக்கானது.. அவர் ஏறியபின் பேருந்து நின்ற மூன்றாவது நிருத்தத்தில் சில வெள்ளை மக்கள் ஏறியதில் சிலருக்கு இருக்கை இல்லாமல் நிற்க நேர்ந்தது.. இதனால், அந்தப் பேருந்தின் நடத்துனர் ரோஸா அமர்ந்திருந்த இருக்கை வரிசை முழுவதையும் எழுந்திருக்கச் சொன்னார். மூன்று பேர் எழுந்துகொண்டனர். அந்த நொடியிலிருந்து வரலாற்றின் பக்கங்களிலிருந்தும், அந்த இருக்கையிலிருந்தும் பிரிய மறுத்தார் - ரோஸா பார்க்ஸ்.

"When that white driver stepped back toward us, when he waved his hand and ordered us up and out of our seats, I felt a determination cover my body like a quilt on a winter night."

அந்த நிகழ்வின் பின்விளைவாக அவர் கைது செய்யப்பட்டார். இவருக்கு முன்னால் பல கறுப்பு மக்கள் இதே போல கைது செய்யப்பட்டிருந்தாலும், இந்த நிகழ்வு பெரிது படுத்தப்பட்ட அளவினால் வரலாறாகின்றது.

இந்தப் ப்ரச்சனைகளுக்கு குரல்கொடுக்கப் புதிதாக ஒரு எழுச்சி இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது - மான்ட்கோமெரி இம்ப்ரூவ்மென்ட் அசோசியேஷன் என்ற அந்த இயக்கத்துக்கு புதிதாக அங்கே குடிபெயர்ந்திருந்த மார்டின் லூதர் கிங் ஜூனியர் என்பவர் தலைவராக நியமிக்கப்பட்டார்.

அமெரிக்க காலத்தின் பாதையில் இந்நிகழ்வுகள் ஒரு முக்கியமான திருப்பமாக அமைந்தன.

இந்த நிகழ்வின் எதிரொலியாக கறுப்பு மக்கள் பேருந்தில் பயணிப்பதை புறக்கணித்தனர். சும்மா ஒன்றிரண்டு நாட்களுக்கு இல்லை... முழுதாக முன்னூற்று எண்பத்தோரு நாட்கள். அதன் அதிர்வலையாக நடந்த பல சட்ட மாற்றங்கள், மன மாறுதல்கள், சமுதாய மாறுதல்கள் - இன்றைய அமெரிக்காவை செதுக்கின.

மார்டின் லூதர் கிங் - நம்ம ஊர் மஹாத்மா காந்தியடிகளின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு அதே மாதிரி சுதந்திர ய்த்தத்தை அமெரிக்காவில் அரங்கேற்றினார். Non-violent resistance !

இவரது சொற்பொழிவுகள் வரலாற்று சிறப்புவாய்ந்தவை. வாஷிங்டன்னில் இவர் அரங்கேற்றிய "I have a dream" என்ற உரை இன்றளவும் பிரபலமாக உள்ளது. அதில் எனக்குப் பிடித்த வரி - ""I have a dream that my four little children will one day live in a nation where they will not be judged by the color of their skin, but by the content of their character.""

இவரது உரைகள் பிரபலமாக ஆரம்பித்தன.. இவர் உரைகளைக் கேட்க ஆயிரக்கணக்கில் கூட்டம் கூடியது.. ஊடகங்களின் கவனம் அதனால் கிடைத்தது.. அதன் மூலம், அமெரிக்க தேசத்தையே அவர் கருத்து சென்றடைந்தது. இந்த கூட்டங்கள், அமெரிக்காவின் முக்கியமான சட்ட சீரமைப்புக்கள் அமைய உதவின.. அந்த சட்ட மாற்றங்கள், கறுப்பு நிற மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தின..

இன்று பேரக் ஒபாமா என்ற கறுப்பர் அமெரிக்காவை ஆள்கிறார்.

இவர் தேர்தலுக்காக போட்டியிட்டபோது யாரோ ஒருவர் எழுதியது இங்கே குறிப்பிடத்தக்கது.

Rosa Parks sat so Martin Luther King could walk
Martin Luther King walked so Obama could run
and Obama is running so our children can fly

சுபம்

3 comments:

Anonymous said...

nice post. I would love to follow you on twitter. By the way, did anyone hear that some chinese hacker had busted twitter yesterday again.

Venkatramanan said...

"அன்று அவர் அமர்ந்திருந்ததால் இன்று நாங்கள் நிற்க முடிந்தது" என்று மார்ட்டின் லூதர் கிங் சொன்னதாக இதைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்! அப்புறம் எப்படி இருக்கிறது தூரதேசத்து வாழ்க்கை?!

அன்புடன்
வெங்கட்ரமணன்

அகல்விளக்கு said...

ஒரு எழுச்சியின் சின்னத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நண்பா...